நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாழைத்தார் ஏல சந்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரமக்குடி தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஏல சந்தை ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமை […]
