மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் உள்ள அகரப்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதுடைய முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற மாடு இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் முருகேசனும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து அந்த மாட்டை […]
