மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருவாடு மண்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக அங்கு சென்று வீட்டிற்கு தனது மனைவியான […]
