கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]
