வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத், கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 – ஆம் தேதி இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியுள்ளனர். அதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
