வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையத்தில் இருக்கும் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது உடையார் பாளையத்தைச் சேர்ந்த இளவரசன், அஜித்குமார், பழனி, வீராச்சாமி, தமிழரசன் உள்பட 10 வாலிபர்கள் கோஷமிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கரன், ஆகாஷ் ஆகியோருடன் இளவரசன் உள்பட 10 பேரும் தகராறு செய்ததாக […]
