இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அருண் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி படித்து வருகின்றார். இந்நிலையில் அருண்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி அருண்குமார் அங்கு சென்று வந்துள்ளார். […]
