சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அமீர்பாளையத்தில் கட்டிட தொழிலாளியான வைரமுத்து(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வைரமுத்துவை கைது செய்தனர். […]
