வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டென்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமியிடம் பேசியுள்ளார். இதனை ரமேஷ்குமார் கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனும், மகாலட்சுமியும் கடந்த 4 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்குமார் கோவில்பட்டிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். […]
