பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு 91 கோடியை 15 ஆவது நிதி குழு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சென்னை நகர செயல்திட்ட அறிக்கை, நுண்ணறிய திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஐந்து இடங்களில் […]
