சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் டாக்டா் சி.கே.தனசேகரன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை(நேற்று) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டா் வி.தீபக்நல்லசாமி பேசியபோது “பல் மருத்துவத்துறையில் சா்வதேச தரமிக்க மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டுள்ளோம். இதையடுத்து பல் மருத்துவச் சிகிச்சை குறித்த மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், உலகத்தரமிக்க இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன மருத்துவ இயந்திரங்கள், உபகரணங்கள் கொண்டு செயற்கை பல் தயாரிப்பு, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். […]
