கோவையில் வாயில் காயம்பட்டதால் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர். அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் […]
