தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி […]
