வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பேர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஜீவா- தனபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் தனபாக்கியம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் தனபாக்ககியத்தின் கழுத்தில் இருந்த10 1/2 பவுன் சங்கிலியை பறித்துக் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுக்குறித்து தனபாக்கியம் […]
