விஷம் குடித்து வாங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள சற்குணவீதியை சேர்ந்தவர் கோபி. இவர் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த கோபி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். […]
