பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிலர் வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]
