பெரம்பலூரில் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு முடிந்த பின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலன்று குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதிக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் பயன்படுத்த உள்ள செல்போன் செயலி குறித்தும், வாக்குபதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய […]
