அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பாரத்நகர் பகுதியில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுப்பிரமணியன் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
