காட்டு யானை சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பசுமையாக காட்சியளிப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மைசூரு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை மெதுவாக இயக்கி செல்கின்றனர். மேலும் யானைகளை செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒரு காட்டு யானை திடீரென வாகனங்களை துரத்தியதால் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் […]
