யானைகள் லாரியை வழிமறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் கரும்புகளை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கரும்புகளை சாப்பிடுவதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா […]
