ஆடு மேய்க்க சென்ற 2 பேரை வழிமறித்து கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள மல்லையாபுரத்தில் மணி, ராஜப்பன் ஆகிய முதியவர்கள் வசித்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள சின்னமலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் மீண்டும் ஆடுகளை அழைத்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென கரடி ஒன்று அவர்களை வழிமறித்து இருவரையும் தாக்க முயன்றது. […]
