கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கோவளம் ஊராட்சியில் கடந்த மே மாதம் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டது. இங்கு அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம் கோவிட் இல்லா கோவளம் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 6,500 நபர்களுக்கு இரண்டு கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி […]
