சசிகலாவின் விஷயத்தில் இந்த இரண்டு பேரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சசிகலா தற்போது நலமாக இருக்கிறார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. […]
