வழக்கறிஞரை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபட்டியில் பாலசுப்பிரமணியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சக்திவேலின் மனைவி கோவிந்தம்மாள், உறவினர்களான திவ்யா, தங்கமணி, பெரியசாமி, செந்தில், ஏழுமலை ஆகிய 6 பேரும் பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு […]
