சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசிதிருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சாமி வீதி உலா, சமய மாநாடு, சிறப்பு ஆராதனைகள் போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் […]
