தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி ஆகிய கோவில்களில் சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், சூரியபகவான், பச்சரிசி, மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன், சாமிக்கு சிறப்பு […]
