வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]
