அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. […]
