சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் யானைகள் அதிக அளவில் கடந்து செல்லும் ரயில்வே தண்டவாளங்கள் கண்டறியப்பட்டு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தவிர்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின் ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும். இதனையடுத்து […]
