தாய்லாந்தில் காணாமல் போன ஒரு வயது குழந்தை மூன்று நாட்கள் கழித்து ஒரு குகையில் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்லாந்தில் உள்ள Chiang Mai என்ற கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய நேரத்தில், வீட்டிற்கு வெளியில் Pornsiri Wongsilarung என்ற ஒரு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனது. எனவே குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்பு, சுமார் 200 காவல்துறையினர், மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று […]
