வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சின்னதம்பி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை அகஸ்தியவர் கோவில் பகுதியில் வசிக்கும் துரைராஜ் என்பவர் சாதியைச் சொல்லித் திட்டியுள்ளார். இதுகுறித்து சின்னதம்பி கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜை கைது செய்துள்ளனர். ஆனால் துரைராஜிற்கு உடல்நிலை […]
