விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் பாக்கம்-கெங்கவரம் பகுதி 1897ஆம் வருடம் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. இந்த காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். அதாவது 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு உடைய இந்த காட்டில் சிறுத்தை, கரடி, அரிய வகை சிலந்திகள், அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எரும்பு தின்னி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்ற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை […]
