Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய பிணம்…. வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

அமராவதி வனப்பகுதியில் முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அமராவதி வனப்பகுதியில் வனக்காப்பாளர் குருமூர்த்தி, வனக்காவலர் ஜோர்ஜ்குட்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரத்தில் முதியவர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை காவலர்கள் ரோந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது மலை அடிவாரத்தில் சிவப்பு  நிறத்தில் நூல் கட்டப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த வனக்காவலர்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

காட்டுக்குள் கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள்…. போலீஸ் விசாரணை….!!

வனப்பகுதி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள காட்டுக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறையினர் வனப்பகுதியில் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்த எலும்புக்கூடுகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொஞ்ச வெயிலா அடிக்கு…. அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்… மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு..!!

ஆசனூர் வனப்பகுதியில் வெப்பத்தின் காரணமாக தீடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ போதுமான தண்ணீர் இல்லாமல் மிகுந்த வரட்சியில் காணப்படுவதுடன், வன விலங்குகள் உணவுகளை தேடி ஊருக்குள் நுழைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரேபாளையம் பிரிவிலிருக்கும் வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் தீ பற்றி மளமளவென  எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்த வழியாக […]

Categories

Tech |