வனப் பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் நாள்தோறும் வன விலங்குகளின் பாதுகாப்பு, வெளி நபர்களின் நடமாட்டம், உணவு மற்றும் நீர் ஆதாரத்தை ஆய்வு செய்வதற்காக சுற்று வாரியாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
