வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்றுகோம்பை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் ஒருநபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் […]
