கோவை அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலை எனவும் தென்கைலாயம் அழைக்கின்றனர். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென வானிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சித்ரா […]
