ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், கால்நடை துறை மருத்துவர் சதாசிவமும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து […]
