நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையத்திற்காக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மருத்துவமனை ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதியில் தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி நடமாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் கரடி புதருக்குள் சென்று மறைந்தது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் […]
