கூலித்தொழிலாளி வீட்டில் நுழைந்த உடும்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அமராவதி நகர் 3வது தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூக்கையா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போடி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு […]
