வருவாய்த்துறையில் செயலை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருப்பூர் மாவட்ட பொது மக்கள் அறிவித்துள்ளனர். திருப்பூரிலுள்ள காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி குழலிபாளையம் பகுதியை, காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி அவர்கள் ஓடை, புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகளை 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் நில அளவையாளர் உதவியுடன் நிலஅளவிட்டு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் தகவல் கேட்டபொழுது, அதிகாரிகள் பதில் ஏதும் சொல்லாமல் தங்களது பணியை மட்டும் முடித்துவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றனர். […]
