அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் […]
