வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சஞ்சய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அறையில் தனியாக இருந்த சஞ்சய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சயின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
