வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின் வெளியே டாக்சி ஓட்டுநர் தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் […]
