நாகையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கபடுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்ற 15, 16-ம் தேதி நடைபெறவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மதுசூதனன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு கூட்டமைப்பு […]
