லெபனான் நாட்டில் நிதி நெருக்கடியானது கடுமையாக நிலவிவருகிறது. அந்நாட்டின் பணம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பிழந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வங்கிகளிலிருக்கும் தங்களின் வைப்பு தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுக்கும் விதமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிலுள்ள ஒரு வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை வைப்புதொகையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் அதிக தொகையை […]
