வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். […]
