தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் […]
