பிரபல நடிகையின் புதிய படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ‘அழகிய கண்ணே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை விஜய குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் 100 பேர் கொண்ட […]
