சட்ட விரோதமாக கடத்திய மணலை லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் தொருவளூர் காலனியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் இருந்து மணலை திருயது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆர். காவனூரில் வசிக்கும் சௌந்தரராஜன் […]
