மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவருடன் கோபித்துகொண்டு பிள்ளைகளுடன் தனது […]
